View In English
இடேரியன்–மலர்கள்1

மலர்கள்  வகுப்பு முக்கியத்துவம்  இலக்கணம், சொற்றொடர் அமைப்பு

  1. தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
    எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல்.
  2. கற்ற சொற்களைப் பயன்படுத்தி மூன்றிற்கு மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள்
    தொடர்ந்து சொல்ல, எழுதக் கற்றல்.
  3. தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
    கூற, எழுதக் கற்றல்.
  4. பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பழக்க வழக்கங்கள் பற்றி நாலைந்து சொற்றொடர்கள் கூற,
    எழுதக் கற்றல்.
  5. பாடப்புத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள் – தமிழ், தமிழர் வாழ்வு, வரலாறு படிக்க, பொருள்
    அறிந்து விவரங்கூற, எழுதக்கற்றல்.
  6. தாம் கற்கும் பாடல்கள், கட்டுரைகளில் மேலும் பல அருஞ்சொற்களின் பொருள் கற்று, அவற்றைப்
    பயன்படுத்தக் கற்றல்.
  7. தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளைக் கற்றல். அமைப்பிற்குத் தேவையான இலக்கணம்
    அறிதல், கற்றல்.
  8. தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்களில் நாலைந்து பொருட்களைப் பற்றி
    நாலைந்து சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் ஆசிரியருடன் உரையாட பயிற்சி எடுத்தல்.
  9. தொடர்ந்து திருக்குறள்கள், தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், பொருள் கூறவும்
    எழுதவும் கற்றல்.
X

    Tech Support Request

    Non-technical questions will not be answered.